Thursday, January 15
Shadow

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு*

*தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு*

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


*தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு :*

நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி,

திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்

1, பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும்.
அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 

2, தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.

 

3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது

*அரசாங்க கவனத்திற்கு*

1, திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு: ரூ.250 வரையும்
A/C திரையரங்குகளுக்கு: ரூ.200 வரையும்
NON A/C திரையரங்குகளுக்கு: ரூ. 150 வரையும்
என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

2, நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது.
அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

3, Operator License க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள்.
அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை.ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல்
Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4, MALL ளில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity க்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity க்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

5, மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள்
MSME இன் கீழ் வருவதால் MSME விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷமின்றி நடத்த முடியும்.
நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

R.பன்னீர்செல்வம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

Related posts:

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி Pottuvil Asmin : A Beacon in the Sea of Contemporar...

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!

வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி*

The #ThiruManickam Family expresses its Heartiest Birthday Wishes to the Adorable Icon of Cinema, Director-Actor @dir_bh...

வீர வணக்கம் திரைவிமர்சனம்

பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு! பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு!✨🦋

நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!*

வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு*