மனதை வருடும் கவித்துவமான காதல் பயணம் – “என்னை ஏதோ செய்து விட்டாய்” திரைப்பட விமர்சனம்
மனதை வருடும் கவித்துவமான காதல் பயணம் – “என்னை ஏதோ செய்து விட்டாய்” திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தாலும், காதலின் உணர்வுகளை வெறும் காட்சிகளாக அல்லாமல், வாழ்க்கையின் நினைவுகளோடு இணைத்து சொல்லும் படைப்புகள் அரிது. அந்த வகையில், புதுமுகங்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள “என்னை ஏதோ செய்து விட்டாய்”, காதல், நட்பு, ஏக்கம், தவிப்பு, பிரிவு மற்றும் மீண்டும் இணையும் உணர்வுகளை கவித்துவமான திரைமொழியில் பதிவு செய்யும் வித்தியாசமான காதல் திரைப்படமாக அமைந்துள்ளது.
கதைக்களம்
சிறுவயதிலேயே தாயை இழந்து, தந்தையின் பாசத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் வளர்கிறார் ஆண்டனி. மனைவியை இழந்த சோகத்தில் அவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இதனால் சிறுவயது முதலே அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் மனநி...









