Saturday, April 18
Shadow

லட்சுமி நாராயணா நமோ நமஹ

லட்சுமி நாராயணா நமோ நமஹ

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… ”லட்சுமி நாராயணா நமோ நமஹ”ஆன்மிகப் புராண தொடர்.

இந்த வாரம் –
லட்சுமியை அடைய ஆசைப்படும் அசுரன் ஹயக்ரீவனிடமிருந்து நாராயணர் லட்சுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்ன…?

நாராயணர் தாமரை மலரில் லட்சுமியை தோற்றுவித்து தன்னோடு இணைந்து பிரபஞ்ச கடமையை செய்யும்படி கேட்கிறார். அந்த நேரம் மரத்தில் தாய்ப்பறவையை இன்னொரு வலிய பறவை வேட்டையாடுகிறது. லட்சுமி மரக்கூட்டில் குஞ்சுகள் தவிப்பதைக் கண்டு நாராயணரிடம் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். நாராயணரோ மௌனம் சாதிக்கிறார். வலிய பறவை தாய்ப்பறவையை வேட்டையாடிச் சென்று விடுகிறது. லட்சுமி கோபத்துடன் நாராயணரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் நாராயணரே என்று கேட்கிறார். இதுதான் பிரபஞ்சத்தின் சமநிலை, இந்த குஞ்சுகள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகின்றன என்று கூறுகிறார். லட்சுமியினால் நாராயணரின் கூற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாராயணரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்.
லட்சுமி இல்லாத வெறுமையில் நாராயணர் வாடுகிறார். அதேபோல் தனியாக இருக்கும் லட்சுமியும் பிரிவுத்துயரில் வாடுகிறார். இந்நிலையில் சிவன் நாராயணரிடம் வந்து லட்சுமியை பிரிந்திருப்பது கூடாது என்று அறிவுரை வழங்குகிறார். நாராயணரும் உண்மையை உணர்கிறார்.

அப்போது அசுரன் ஹயக்ரீவன் தான்தான் இனி எல்லா லோகங்களுக்கும் நாராயணர்… இனி லட்சுமி எனக்குதான் என்று சூழுரைத்து லட்சுமியை கடத்தி வருவதற்காக தன் தம்பி அஜினா அசுரனை அனுப்பி வைக்கிறான். அதற்கு முன்பு நாராயணருக்கு பிரச்சனையைக் கொடுத்து கவனத்தை திசை திருப்புவதற்காக மது கெட்டப் என்கிற இரு அசுரர்களை வைத்து பிரம்மலோகத்திலிருந்த வேதத்தைத் திருடச் செய்கிறான். பிரம்மாவுக்கு உதவுவதற்காக நாராயாணர் வேதத்தை மிட்க சென்று விடுகிறார். அதனால் வேறுவழியில்லாமல் லட்சுமியை காக்கும் பொருட்டு தன் தீவிர பக்தன் நாகநாதனை அனுப்புகிறார். லட்சுமியை நெருங்கும் ஹயக்ரீவனின் அசுரத் தம்பியை நாகநாதன் எதிர்கொண்டு அடித்து வீழ்த்துகிறான். தோவியுறும் நிலையில் அசுரன் தன் அண்ணன் ஹயக்ரீவனை அழைக்கிறான். அங்கு ஹயக்ரீவன் தோன்றி நாகநாதனை அடித்து வீழ்த்துகிறான். பின் லட்சுமியை நெருங்குகிறான். அசுரன் ஹயக்ரீவனிடம் சிக்கிக்கொண்ட லட்சுமி தன்னைக் காக்கும்படி நாராயணருக்கு அபயக்குரல் எழுப்பிகிறார். நாராயணர் தோன்றி லட்சுமியை அசுரன் ஹயக்ரீவனிடமிருந்து காப்பாற்றினாரா….? லட்சுமியின் இக்கட்டான நிலை நிவர்த்தியாயிற்றா…?

இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பகும் `லட்சுமி நாராயணா நமோ நமஹ` தொடரை காணத் தவறாதீர்கள்.

Related posts:

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா 

இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் !

பிரைம் வீடியோவின் ' சுழல் - தி வோர்டெக்ஸ் ' முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

பாஸ் என்கிற பாஸ்கரன் 'திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !

Witness the enhanced version of #Indian2 🇮🇳✂️ Now presenting a streamlined edition trimmed by 12 min. Catch it in cinema...

சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியா...

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான "பறந்து போ" படத்தை வழங்குகிறது !!