கதறி அழுத ஏழையின் கண்களில்
ஆனந்த கண்ணீர் வர வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமம், கக்கனம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பி தான் கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தை 500 ரூபாயாக மாற்றி ஒரு லட்சம் ரூபாயை பாதுகாப்புக்காக தகர உண்டியலில் வைத்து தனது கூரை வீட்டினுள் மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தன் பிள்ளைகளுக்கு காதனி விழா நடத்த திட்டமிட்டு அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது அதனை கரையான் முற்றிலுமாக அரித்து விட்டது. அதனால் அவர் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டு இருந்தனர், இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த ஒரு லட்சம் ரூபாயை தான் கொடுப்பதாக தனது சமூக வலைத்தலத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி இன்று முத்துக்கருப்பியை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அந்த ஒரு லட்சம் ரூபாயை தனது கையால் அவருக்கு கொடுத்து அவரை நெகிழ்வடையை வைத்தார்.
# மாற்றம் சேவை தொடரும்.
Pro. Bhuvan Selvaraj
( 08.05.2025 )
