பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்*
*கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’*
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா “பெண்ணின் மானம் காப்பதே பிரபஞ்ச தர்மம்” என சொல்லி இருக்கிறார். அப்படி பெண்ணின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள், மானத்தை காக்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், உதவி செய...









