சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு
சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு கதைக்களம் ஏற்கனவே பார்க்கப்பட்ட களம் என்றாலும் திரை கதை முற்றிலும் புதுமையான வித்தியாசமான களம் கல்வியை ஆதிக்க சாதியினர் எப்படி முடக்கி வைத்தனர் என்பதை மிக அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் போஸ் வெங்கட்
தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க சாதி குடும்பம் ஒன்று. இதை எதிர்த்து, முயற்சி எடுத்து அரசுப் பள்ளியைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி செய்கிறார் நல்லாசிரியர் ஒருவர். இது அங்கிருக்கும் ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அந்த நல்லாசிரியருக்கு மனநோயாளி என்று முத்திரை குத்தி ஒடுக்கிவைக்கிறார்கள்.
இது மூன்றாம் தலைமுறையிலும் தொடர்கிறது. தாத்தா, அப்பாவின் வழியில் ஆசிரியர் ஞானம் வருகிறார். அப்போதும் பள்ளி...









