மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.
‘மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.
அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குருராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கதில் விஷ்ணு பிரசாத் இசையில் வெளிவந்து இருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’
பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர் பின்னாடியே மாசக்கணக்கில் அலைகிறார். ஒரு வழியாக அவரிடம் தன் காதலை சொல்ல, ரெபா அதை மறுத்துவிடுகிறார். ரெபா மறுத்தால் என்ன?, அவர் மனதில் காதல் வரும் வரை காத்திருப்பேன், என்ற முடிவுக்கு வரும் நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘மழையில் நனைகிறேன்’.
சிறு சிறு வேடங்க...









