Saturday, April 18
Shadow

Author: Tamil galaxy

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

Uncategorized
*தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* சென்னை, 19 நவம்பர் 2025: தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.   அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.   இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதிய...
டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

News
*டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்*   சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.   இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் ...
தாவூத் திரைவிமர்சனம்

தாவூத் திரைவிமர்சனம்

Review
“தாவூத்” – இந்த வார ரிலீஸ் படங்களில் திடமாக நிற்கும் கிரைம்–டிராமா! TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு அணியின் வலிமை லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். சாரா ஆச்சர் (டேனி) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்; அவரின் நெகிழும் முகபாவனைகள், இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. திலீபன் (பாய்சன்), ராதாரவி (போலீஸ் கமிஷ்னர்), சாய் தீனா (மூர்த்தி), ஸாரா (மணி), வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் உள்ளிட்டோரின் சேவையும் படத்துக்கு தகுந்த வலிமை சேர்க்கிறது. மேலும், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன...
காந்தா திரைவிமர்சனம்

காந்தா திரைவிமர்சனம்

Review
காந்தா... இந்த படத்தோட கதை என்னன்னா.. 1950கள்ல தமிழ் சினிமால உச்ச நட்சத்திரமா இருப்பவருதான் துல்கர் சல்மான்.. அவரு தன்ன உருவாக்குன இயக்குநர் சமுத்திரக்கனியோட கனவு கதையா உருவாகுற சாந்தா படத்துல இருந்து வெளியேறி மறுபடியும் அந்த படத்தை தொடங்க முடிவு செய்யறாரு.. அதன்படி, மீண்டும் அந்த படத்தோட படப்பிடிப்பு தொடங்குது... ஆனா இந்த தடவ கதை மற்றும் சீன்ஸ்ல துல்கர் சல்மான் நெறைய மாற்றங்கள செய்ய அது சமுத்திரக்கனிக்கு எரிச்சல கொடுக்குது.. ஆனாலும் தன்னோட கனவு கதை அப்படிங்கறதால படத்தை எப்படியாவது முடிக்கனும்ங்கிற கட்டாயத்துல இருக்குற இயக்குநர் சமுத்திரக்கனி, ஹீரோவோட எல்லா அடாவடியையும் பொறுத்துக்கறாரு.. அதுக்காக தான் அறிமுகப்படுத்துன நாயகி பாக்யஸ்ரீய வெச்சு ஒரு திட்டம் போடுறாரு.. சமுத்திரக்கனியோட திட்டம் பழிச்சுச்சா..இவங்க மோதல் எந்த மாதிரியான விளைவுகள ஏற்படுத்துது.. திட்டமிட்டபடி படத்த எடுத்து முடிச்சாங்...
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவின்

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவின்

Review, Uncategorized
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது.   கதை & திரைக்கதை   ராயபுரம் தாதா பூங்காவனம் (ஆனந்தராஜ்) ஏரியா அடிப்படையில் “ரவுடி ஏஜென்சி” நடத்துவது போன்ற யூனிக் செட்டப்பில் படம் தொடங்கினாலும், அதன் பின்னர் கதை மிக நேர்த்தியாக வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. ரவுடிசமும், காமெடியும், ஆக்சனும், செண்டிமெண்டும் எல்லாம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியும் முழுமைப்படாமல், கதை திசைமாறும் தருணங்கள் அதிகம்.   பூகாவனத்தின் என்கவுண்டரை தடுக்க அவர் செய்வது ஹீரோயிசமா அல்லது காமெடியா என்பது பல காட்சிகளில் த...
கும்கி 2 திரைவிமர்சனம்

கும்கி 2 திரைவிமர்சனம்

Review
கும்கி 2’ – 12 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் உணர்வுகளால் நிரம்பிய வெற்றி பயணம்! பத்திரிகை விமர்சனம் (நேர்த்தியான தொகுப்பு)   தமிழ் சினிமாவில் யானை–மனிதன் உறவை உணர்ச்சியோடு பேசிக் காட்டிய கும்கி (2013) படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூல், விமர்சனம்—இரண்டிலும் வெற்றி கண்ட அந்தப் படத்திற்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள தொடர்ச்சிப் படம் கும்கி 2, மறு முறை இதயத்தை தொடும் முயற்சியாக அமைந்துள்ளது. முதல் பாகம் உயர்த்திய எதிர்பார்ப்பை இந்தத் தொடர்ச்சி எப்படி சமாளிக்கிறது என்று பார்ப்போம்.   ---   நடிகர்கள்   மதி – பூமி   ஷ்ரிதா ராவ் – அனலி   ஆண்ட்ரூஸ் – காளீஸ்   அர்ஜுன் தாஸ் – பாரி   ஆகாஷ் – சிக்கல்   ஹரிஷ் பபரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கியமாக நடித்துள்ளனர்.     &n...
சிவாஜி கணேசன் பேரனை வாழ்த்திய ரஜினிகாந்த்

சிவாஜி கணேசன் பேரனை வாழ்த்திய ரஜினிகாந்த்

News
சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் தர்ஷன் கணேசன் அவர்களின் வரவிருக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்துக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் திரு. டி. ஜி. தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன், மேலும் திரு. ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். “லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்த...
திரைப்பட விமர்சனம்: “ராம் அப்துல்லா ஆண்டனி” – சமூக விழிப்புணர்வை கூறும் முயற்சி  திருவள்ளூர் மாவட்டத்தை மையமாகக் கொண்ட கதை

திரைப்பட விமர்சனம்: “ராம் அப்துல்லா ஆண்டனி” – சமூக விழிப்புணர்வை கூறும் முயற்சி திருவள்ளூர் மாவட்டத்தை மையமாகக் கொண்ட கதை

Review
திரைப்பட விமர்சனம்: “ராம் அப்துல்லா ஆண்டனி” – சமூக விழிப்புணர்வை கூறும் முயற்சி திருவள்ளூர் மாவட்டத்தை மையமாகக் கொண்ட கதை. பள்ளியில் படிக்கும் மூன்று நண்பர்கள் — ராம், அப்துல்லா, ஆண்டனி. அவர்கள் இணைந்து, தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்துகின்றனர். பின்னர் அவனை கொடூரமாக கொலை செய்து, உடலை துண்டாக்கி ஓடையில் வீசிவிடுகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் தீனா நியமிக்கப்படுகிறார். அவர் தன் நுணுக்கமான விசாரணையின் மூலம் உண்மையை கண்டறிந்து, மூன்று மாணவர்களையும் கைது செய்கிறார். ஆனால், இந்த கொலைக்குப் பின்னாலுள்ள உண்மையான காரணம் என்ன? மாணவர்கள் திட்டமிட்டு செய்தார்களா, இல்லை வேறு யாரோ வழிநடத்தினார்களா? வழக்கின் முடிவில் அவர்கள் விடுதலையாகிறார்களா? — என்பதே படத்தின் மையக்கரு. படத்தின் சிறப்பம்சமாக மூன்று இளம் நடிகர்களின் (பூவையார், அஜய், அர்ஜூன்) நடிப...
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு

News
*மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!* கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதா...