Tuesday, April 21
Shadow

Author: Tamil galaxy

நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

News
நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை 'ரெட் லேபிள்' என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது. சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெ...
ஆர்யன் திரைப்பட விமர்சனம்!

ஆர்யன் திரைப்பட விமர்சனம்!

Review
ஆர்யன் திரைப்பட விமர்சனம்! பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தின் விமர்சனம் இதோ.. படத்தோட தொடக்கத்தில் ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது உள்ளே நுழையும் செல்வராகவன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.. அதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் தோன்றும் செல்வராகவன் தான் அடுத்த நபரை சொல்லப்போவதாக சொல்கிறார்.. அதன்படியே ஒரு கொலையும் நடக்கிறது..அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஊடகங்கள் வழியாக தோன்றி இன்னும் சிலரை கொல்லப்போவதாக சொல்ல அதன்படியே அடுத்தடுத்து கொலைகளும் நடக்கிறது.. இதனை துப்பறிந்து கண்டுபிடிக்கும் அதிகாரியாக வரும் விஷ்ணு விஷால், அனைத்து கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? மேலும் கொலைகள் நிகழாமல் தடுத்தாரா? என்பதே மீதிக்கதை... விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதைகள் என்றால் அவருக்கு அல்வா சாப்ப...
மெசஞ்சர் திரை விமர்சனம்

மெசஞ்சர் திரை விமர்சனம்

Review
மெசஞ்சர் திரை விமர்சனம் மெஸஞ்சர்.. இந்த படத்தோட கதை என்னன்னா?.. ஐடி ஊழியரான ஸ்ரீராம் கார்த்திக்கோட காதலி வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. இதுனால தன்னோட வீட்ல தூக்குப் போட்டு தற்கொலை செஞ்சுக்க முயற்சி செய்யுற ஹீரோவுக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலமா அவரோட பேஸ்புக் பிரண்ட் கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வருது..ஆனா நான் ஏற்கனவே இறந்துவிட்டேன்.. உங்கள ரொம்ப பிடிக்கும் அப்படின்னு மெசேஜ்ல அந்த பொண்ணு சொல்ல நாயகனுக்கு ஷாக்.. நாயகியோட ஊரில் சென்று விசாரிக்கும் நாயகனுக்கு அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகுது.. இதனை அடுத்து செத்துப்போன நாயகி மீது நாயகனுக்கும் காதல் வருது.. திருமணமும் செஞ்சுக்கிறாரு.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு அப்படிங்கறதுதான் கதை.. தமிழ் சினிமால எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலுமே இந்த கதை சற்று வித்தியாசமாக தான் இருக்குன்னே சொல்லலாம்.. ஆனா இது எல்லாம் உண்மையில நடக்குமா அப்படிங...
கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

News
*கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா* தமிழ் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் - கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், 'அசுரன்' படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ்...
பூகம்பம் திரைவிமர்சனம்

பூகம்பம் திரைவிமர்சனம்

Review
🎬 திரைப்பட விமர்சனம்: “இஷாக் உசைனி” – அண்ணன் தம்பி சண்டை சலிப்பின் உச்சம்!   தமிழ் சினிமாவில் “அண்ணன் – தம்பி” பிரிவு, பழிவாங்கல், உண்மை வெளிச்சம் — இதைவிட அதிகமாக அரைத்துக் குடித்துக் குடித்துக் கொண்டிருக்கும் கதை இல்லை. ஆனால் “இஷாக் உசைனி” படம் அதை இன்னும் மிகவும் பழைய மாதிரி மீண்டும் சொல்லி சினிமா ரசிகர்களின் பொறுமையை கடுமையாக சோதிக்கிறது.   🧩 கதை – 90களின் சீரியல் ரிமிக்ஸ்   சிறுவயதில் பிரிந்த அண்ணனும் தம்பியும், ஒருவன் பழிவாங்கும் கோபத்திலும், மற்றவன் பாசத்தின் நம்பிக்கையிலும் வாழ்கிறார்கள். இருவரும் அரசியல் மற்றும் காதல் வழியில் எதிரிகளாக மோதுகிறார்கள். பிறகு உண்மை தெரிந்து குடும்ப உணர்ச்சி டிராமா… அது தான் முழுக்க கதை. இதில் புதுமை, தன்னம்பிக்கை, நவீன சினிமா அனுபவம் – எதுவும் இல்லை.   🎭 நடிப்பு – பெயரை நினைவில் வைத்துக்கொள்வது கடினம் ...
கேம் ஆப் லோன் – படம் அல்ல, பாடம்!

கேம் ஆப் லோன் – படம் அல்ல, பாடம்!

Review
கேம் ஆப் லோன் – படம் அல்ல, பாடம்! அறிமுக இயக்குனர் அபிஷேக் லெஸ்லி இயக்கிய ‘கேம் ஆப் லோன்’ திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கடன், சூதாட்டம், மனித மனம் — மூன்றும் இணைந்தால் என்ன நிகழும் என்பதைக் கச்சிதமாகச் சொல்லும் ஒரு எச்சரிக்கை படம் இது. கதை நாயகன் நிவாஸ் ஆதித்தன் — கொரோனா காலத்தில் வேலை இழந்து மனச்சோர்வில் ஆன்லைன் சூதாட்ட உலகில் விழுகிறார். பணம் பத்தாமல் கடன் வாங்கி, அதை மீண்டும் சூதாட்டத்தில் செலவழிக்கிறார். தோல்வி தொடர்ந்து வர, கடன் தொகை ரூ.65 லட்சம் வரை உயர்கிறது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நேரத்தில், கடன் வசூலிக்க வரும் அபிநய் மற்றும் அவரது குழு நாயகனின் வாழ்க்கையை இன்னும் சிக்கலில் தள்ளுகிறது. அதன்பின் நிகழ்வுகள் தான் படம் சொல்லும் முக்கியமான பயணம்.   இன்றைய காலகட்டத்தில் இந்த படத்தின் கதை கரு உண்மை சம்பவமாக பல இடங்களில் நடைபெற்று வ...
Verdict திரைவிமர்சனம்

Verdict திரைவிமர்சனம்

Review
எடிட்டிங் – கதையின் வேகம் ஒருபோதும் குறையாது; மிகச் சரியான ரிதமில் நகர்கிறது.   ஆர்ட் டைரெக்ஷன் – கிராமிய வாழ்க்கையின் இயல்பை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியுள்ளது.   ஸ்கிரிப்ட் & டயலாக்ஸ் – எளிமையாக இருந்தாலும், தாக்கம் மிகுந்தது. ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.       —   மொத்தத்தில் (Verdict)   பைசன் என்பது ஒரு திரைப்படத்தை விட ஒரு அனுபவம். மாரி செல்வராஜ் இந்த முறை கோபத்துடன் அல்ல, கருணையுடன் பேசுகிறார் — அதுவே இந்த படத்தின் பெருமை. துருவ் விக்ரமின் சிறந்த நடிப்பு, பசுபதி மற்றும் அமீரின் வலிமையான பாத்திரங்கள், நிவாஸ் இசை, தணு குமாரின் காட்சியமைப்பு — அனைத்தும் சேர்ந்து பைசன்’னை ஒரு முழுமையான கலைப்படைப்பாக உயர்த்துகின்றன.   —   ⭐ மதிப்பீடு (Rating): 4.5 / 5 🎯 ...
மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!*

மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!*

News
*"'மேட் இன் கொரியா' கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு"- நடிகை பிரியங்கா மோகன்!* தனது காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள். வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது 'மேட் இன் கொரியா'. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, "கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. 'மேட் இன் கொரியா' கதைய...
வில்- திரை விமர்சனம்

வில்- திரை விமர்சனம்

Review
வில்- திரை விமர்சனம் சோனியா அகர்வால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள இத் திரைப்படத்தை எஸ். சிவராமன் இயக்கியுள்ளார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு- டி. எஸ் பிரசன்னா.இசை – சௌரப் அகர்வால் ,படத்தொகுப்பு G. தினேஷ். மறைந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகன்களுக்கு சொத்துக்களை எழுதியது போக சென்னையில் மீதம் இருக்கும் ஒரு பிளாட்டை ஒரு பெண்ணுக்கு எழுதி வைக்கிறார், அந்தப் பெண் யார் என்றே தெரியாத தொழிலதிபரின் வாரிசுகள், வேறு ஒரு பெண்ணை காண்பித்து அந்த பிளாட்டை கைப்பற்றி விடலாம் என்று திட்டமிடுகிறார்கள், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது, இந்த வழக்கினை சோனியா அகர்வால் நீதிபதியாக இருந்து விசாரிக்கிறார் ,அந்த பிளாட்டை சொந்தம் கொண்டாடி வரும் பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுவதால் ,காவல்துறை அதிகாரியாக இருக்கும் விக்ராந்தை அழைத்து உண்மையான அந்தப் பெண் யார் ?என்பதை கண்டுபிடித்து தர...
மரியா திரைவிமர்சனம்

மரியா திரைவிமர்சனம்

Review
அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்க, சாய்ஸ்ரீ பிரபாகரன்,பவேல் நவகீதன்,சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “மரியா”. ஒளிப்பதிவு – ஜி. மணிஷங்கர்,இசை – கோபாலகிருஷ்ணன் & பரத் சுதர்ஷன். இளமை காலத்திலேயே தன்னை கன்னியாஸ்திரியாக மாற்றிக் கொண்ட சாய் ஸ்ரீ பிரபாகர் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்தக்கார பெண்ணான சித்து குமரேசன் தங்கி இருக்கும் வீட்டுக்கு வருகிறார் , சித்து தன் பாய் ஃப்ரெண்ட் பவேல் நவகீதன் கூடலிவிங் டுகெதர் ஆக தங்கி இருக்காங்க.அவுங்க கூடவே இன்னும் இரண்டு பேர் தங்கி இருக்காங்க. ஒரு ஃபோன் கூட இல்லாமல் கன்னியாஸ்திரியாக இருக்கின்ற சாய் ஸ்ரீக்கு இவங்களுடைய வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களும் புதுசாக தெரியுது. சாய் ஸ்ரீ ஹாஸ்டல்ல எப்படி இருந்தாங்களோ அதே மாதிரி ஆரம்பத்துல நடந்துக்கிறாங்க ,ஆனால் சித்துவின் வற்புறுத்தலி...