Wednesday, June 3
Shadow

Review

ஜாக்கி திரைவிமர்சனம்

ஜாக்கி திரைவிமர்சனம்

Review
ஜாக்கி – மண்ணின் மணமும், மானத்தின் மோதலும் கொண்ட ஒரு வலிமையான கிராமிய காவியம் மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. ஆட்டுச் சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் – கருப்புக் காளியுடன் அரங்கில் கால்பதிக்கும் சாதாரண மனிதன். ஆனால் அவன் காலடிச் சத்தம், அந்த அரங்கில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாக ஒலிக்கிறது. இதுவரை அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த கார்த்தியின் ஆதிக்கத்தை ஒரே மோதலில் சாய்த்துக் காட்டும் தருணம், வெறும் வெற்றியல்ல… அது ஒரு சமூக அமைப்பையே உலுக்கும் புரட்...
வா வாத்தியார் திரைவிமர்சனம்

வா வாத்தியார் திரைவிமர்சனம்

Review
வா வாத்தியார் – எதிர்பார்ப்பை ஏமாற்றிய நலன் குமாரசாமியின் வீழ்ச்சி ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் ஒரு ஸ்ட்ராங்க் கம்பேக் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்தது. ஆனால் திரையில் வந்த பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி விட்டது ‘வா வாத்தியார்’. எம்ஜிஆர் பக்தி, அரசியல் ஃபேண்டஸி, சமூக அநீதி, இரட்டை வேடம் என எல்லாவற்றையும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்த மாதிரியான குழப்பமான திரைக்கதை. ஒரு தெளிவான ஜானர் கூட இல்லை.   எம்ஜிஆரின் அவதாரமாக பேரனை வளர்க்கும் தாத்தா, சூழ்நிலையால் திருந்தும் ஹீரோ, அநீதிக்கு எதிராக போரா...
திரை விமர்சனம் : ‘அனந்தா’

திரை விமர்சனம் : ‘அனந்தா’

Review
திரை விமர்சனம் : ‘அனந்தா’ ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அனந்தா’. புட்டபார்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் கதை தொடங்குகிறது. சாய்பாபா ஒருமுறை கடைசியாக ஆசிரமத்திற்கு வருமாறு கூறியதாக மருத்துவமனை நிர்வாகி தெரிவிக்க, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடுகிறார்கள். சுஹாசினி, ஜகபதி பாபு, வை.ஜி. மகேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது வாழ்க்கையில் சாய்பாபா ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவக் கதைகளாக பகிர்ந்து கொள்கிறார்கள். புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படம், மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றை சாய்பாபாவின் தெய்வீக அருள் எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் குறும்படத் தொடர் வடிவில் சொல்லுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் உணர்ச்சியையும் பக்தியையும் முன்னிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது...
பராசக்தி திரைவிமர்சனம்

பராசக்தி திரைவிமர்சனம்

Review
‘பராசக்தி’ – வரலாற்றின் குரலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு சினிமா ஆவணம் தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தை வெல்லும். சில படங்கள் காலத்தோடு பேசும். அதிலும் அரிதாக சில படங்கள் காலத்தையே மீண்டும் உயிர்ப்பிக்கும். அந்த வரிசையில் நிற்கும் படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் 25-வது படம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100-வது இசையமைப்பு, சுதா கொங்கராவின் அழுத்தமான எழுத்து-இயக்கம் – இந்த மூன்று காரணங்களே இந்தப் படத்தை ஒரு சாதாரண பீரியட் படமாக இல்லாமல், ஒரு வரலாற்றுச் சினிமா நிகழ்வாக மாற்றுகின்றன. இந்த படம் ஒரு மொழியைப் பற்றிய படம் மட்டும் அல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம், உரிமை, தியாகம், கண்ணீர், போராட்டம் ஆகியவற்றின் கதை. “மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு அடையாளம், ஒரு உயிர்” என்பதை ஒவ்வொரு காட்...
தி ராஜா சாப் திரைவிமர்சன்

தி ராஜா சாப் திரைவிமர்சன்

Review
தி ராஜா சாப் – பெயரிலேயே சாபம், திரையில் முழுக்க வேதனை தி ராஜா சாப் ஒரு படமா, இல்லையா 3 மணி நேரம் நம்மை சோதிக்க எடுத்த முயற்சியா என்பதே முதல் சந்தேகம். “தாத்தாவைத் தேடும் கதை”ன்னு சொல்லிட்டு, தியேட்டரில் உட்கார்ந்த நமக்குத்தான் கடைசி வரை **என்னடா தேடுறாங்க? ஏன் தேடுறாங்க? எங்க போகுது இந்தப் படம்?**ன்னு புரியாம போகுது. பிரபாஸ் மாதிரி ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து, இப்படி ஒரு திசைத் தெரியாத, உயிரே இல்லாத படத்தை எடுக்க எவ்வளவு அலட்சியம் வேணும்? கதையே சரியா எழுதல. திரைக்கதைன்னு ஏதோ ஒன்று இருக்கிற மாதிரி நடிக்குது. சீன் ஆரம்பிக்கும், திடீர்னு கட். ஏன் வந்துச்சு, எதுக்குன்னு கேள்வி கேட்டா பதிலே கிடையாது. பாட்டி – தாத்தா – பேரன் சென்டிமென்ட்னு ஆரம்பிச்ச கதை, நடுவுல போய் பேய், ஹிப்னோசிஸ், தாந்திரீகம், காஸ்ட்யூம் பார்டி, காமெடி, ஹாரர், ஃபேண்டஸின்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா தூக்கி போட...
மார்க் திரைவிமர்சனம்

மார்க் திரைவிமர்சனம்

Review
மார்க் – வேகம் தான் மொழி, ஆவேசம் தான் சட்டம் சினிமாவை அமைதியாக உட்கார்ந்து ரசிக்க நினைப்பவர்களுக்கு அல்ல மார்க். இது முதல் காட்சியிலிருந்தே பார்வையாளரை பிடித்து இழுத்து, “இங்கே சிந்திக்க நேரமில்லை, ஓடணும்” என்று கட்டளை போடும் படம். உடல்கள், ரத்தம், குழப்பம் – எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் படம் தொடங்குகிறது. இங்குதான் இயக்குநர் விஜய் கார்த்திகேயா ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறார்: இந்த உலகத்தில் சட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது; நடைமுறையில் இயங்குவது வன்முறையும் உள்ளுணர்வும். படத்தின் ஆரம்பத்திலே நடக்கும் கொலை ரவுடித்தனங்களை நடத்தும் கொடூர சம்பவங்களின் மையமாக நிற்பவன் பட்ரா (நவீன் சந்திரா). அவன் ஒரு வில்லன் அல்ல; வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு மனிதன். தம்பி ருத்ராவின் (விக்ராந்த்) எதிர்ப்பும், குடும்ப அவமானமும் அவனின் வன்முறைக்கு தீப்பொறியாக மாறுகிறது. இங்கு வில்லத்தனம் திட...
சல்லியர்கள் திரைவிமர்சனம்

சல்லியர்கள் திரைவிமர்சனம்

Review
அத்திப்பூ போல அரிதாக மலரும் ஒரு படைப்பு – ‘சல்லியர்கள்’ தமிழ் சினிமாவில் அரிதாகவே சில படங்கள் வெளியாகும். வணிகக் கோஷங்களில் சிக்காமல், ஒரு சமூகப் பொறுப்போடு, வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை நேர்மையாக பேசும் படங்கள் அவை. அத்தகைய அரிதான படைப்புகளில் ஒன்றாக ‘சல்லியர்கள்’ திரைப்படம் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது. ‘சல்லியர்கள்’ என்ற பெயரே இந்தப் படத்தின் முதல் வெற்றி. போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களைக் குறிக்கும் இந்தச் சொல், பலருக்கு புதிதாக இருக்கும். அந்தச் சொல்லைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே இயக்குநரின் ஆய்வும், நேர்த்தியும் வெளிப்படுகிறது. இதற்காக முதலில் இயக்குநர் கிட்டுவுக்கு ஒரு நேர்மையான பாராட்டு அவசியம். இந்தப் படத்தின் கதைக்களம் தமிழ் சினிமா இதுவரை தொடாத ஒரு தளம். போர்க்களம் என்றால் ஆயுதம், ரத்தம், சண்டை என்ற ஒரே கோணத்தில் பார்க்கும் வழக்கத்திலிருந்து முற்றி...
Mission santa திரைவிமர்சனம்

Mission santa திரைவிமர்சனம்

Review
வட துருவம் இல்லை… இது ஒரு டேட்டா சென்டர் — டிஜிட்டல் யுகத்தில் சாண்டா கிளாஸ் ஒரு சாப்ட்வேர் ஆக மாறிவிட்டாரா? யோயோ வட துருவத்துக்குள் நுழையும்போது, அவன் தாத்தா சொல்லிக் கொடுத்த மந்திரக் கதைகளின் உலகம் அவனை வரவேற்கவில்லை. அதற்குப் பதிலாக, கண்ணாடிச் சுவர்கள், குளிர்ந்த LED விளக்குகள், மனித உணர்வற்ற இயந்திர ஒழுங்கு—ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வேர் ஹவுஸ் போல வட துருவம் காட்சியளிக்கிறது. இங்கே சாண்டா கிளாஸ் காணாமல் போயிருக்கிறார். அவருக்குப் பதிலாக, ஒரு ஹோலோகிராம் மட்டும். அது நினைவுகளின் காப்பகம்; அன்பும் வெப்பமும் இல்லாத ஒரு தகவல் இயந்திரம். இந்தக் காட்சியிலேயே படம் சொல்வது தெளிவாகிவிடுகிறது—இது குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் கதை அல்ல; நவீன உலகத்தை குத்திக் காட்டும் சமூக சாடை. 🤖 மந்திரம் இல்லை… மேலாண்மை மட்டுமே வட துருவத்தின் பணிமனை, டெக்னாலஜி ஆதிக்கத்தின் ஒரு சின்னமாக கா...
டியர் ரதி திரைவிமர்சனம்

டியர் ரதி திரைவிமர்சனம்

Review
காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!   20 26 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி 'டியர் ரதி' !   'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.   படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது,   "இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வால...
நிர்வாகம் பொறுப்பல்ல திரைவிமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல திரைவிமர்சனம்

Review
‘நிர்வாகம் பொறுப்பல்ல’ — ஆன்லைன் மோசடிகளின் மறுபக்கம் சொல்லும் திரைபட முயற்சி   நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் மோசடிகள் பெருகி வரும் காலத்தில், அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. பல அடுக்குகள் கொண்ட மோசடிகளால் கோடிக்கணக்கில் பணம் குவிப்பவர் கார்த்தீஸ்வரன். ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்த பின் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்படும் தருணத்தில் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியின் கண்ணில் சிக்கிக் கொள்கிறார். அவர் எப்படி மோசடி செய்கிறார்? மக்கள் ஏன் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்? கார்த்தீஸ்வரன் தப்பிக்கிறாரா? — இவற்றிற்கான பதில்களே படத்தின் நெஞ்சு.   கார்த்தீஸ்வரன் – இயக்குநரும், நாயகனும்   எஸ்.கார்த்தீஸ்வரன், கதாநாயகனாகவும் இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்றிருக்கிறார். வெளிப்படையாக அப்பாவியான தோற்றம் கொண்ட அவரது கதாபா...